|
| |
பாரதியும் மாஜினியும்
சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவியாசிரியராகச் சேர்ந்த நாளிலிருந்து பாரதியாருக்கு ஒரு புதிய பார்வை பிறந்தது. நாட்டு நடப்புகளையும் உலகத்துச் செய்திகளையும் தமிழில் மொழி பெயர்க்கும் பணியால் அவரது அறிவு வளர்ந்தது. தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரத நாட்டின் பரிதாப நிலையை அவர் உணர்ந்தார்.
|
| |
காந்திக்கு தமிழக மக்களிடம் அன்பு உண்டு!
இந்த நாட்டுக்காக காந்தி செய்த தியாகம் இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்குத் தெரியவில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் நாடு எப்படி இருந்தது, ஆங்கிலேயர்கள் எப்படி நம் செல்வத்தை எல்லாம் சுரண்டிச் சென்றனர் போன்றவற்றை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.
|
| |
சிறுகதை: கடிதம்
ஊர்பெண்கள் ஆற்றுத்தடத்தில், குடத்தை இடுப்பில் இடுக்கியபடி மேலேறி வந்து கொண்டிருந்தார்கள். குடத்துத் தண்ணீர் தழும்பி வழிந்ததில், இடுப்புத்துணி ஈரம் நனைந்து ஒட்டிக்கொண்டிருந்தது. கடைசியாய்ப் பாட்டி தளர்ந்துபோய்க் குடத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தாள். சண்முகம், பாட்டியிடம் இருந்து குடத்தை வாங்க ஆற்றோரம் ஆலமரத்தின் கீழுள்ள பிள்ளையார் மாடத்துப் பீடத்தில் காத்திருந்தான்.
|
| |
கஜசம்ஹார மூர்த்தி
இந்த உலகமே என்னால்தான் நடக்கிறது. இந்த வீட்டிலுள்ளவர்கள் என்னால்தான் சாப்பிடுகிறார்கள். இந்த ஆபீசில் எல்லாமே நான்தான். இந்தக் கோயிலில் கடவுள் பட்டினி கிடந்தார். நான் தான் மாசம் பத்தாயிரம் கொடுத்துக் கடவுளுக்கு நைவேத்தியமாவது கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். கடவுளே என்னை நம்பித்தான் இருக்கிறார், ""என ஆணவம் கொண்டு பேசுபவர்கள் எத்தனையோ கோடிப் பேர் இருக்கிறார்கள். இப்படி ஆணவமாகப் பேசித்திரிபவர்களை அடக்க வருகிறார் வழுவூர் கஜசம்ஹார மூர்த்தி.
|
| |
காற்றுக்கென்ன வேலி
இன்றைய இளைஞர்களின் கனவே அமெரிக்காவில் போய் டாலரில் சம்பாதிப்பதுதான். அதுவும் அடையார் ஐ.ஐ.டி. ஸ்டூடண்ட் என்றால் கையில் ஆரத்தித் தட்டுடன் அமெரிக்காவே வரவேற்கும். புத்திசாலித்தனத்திற்கு அங்கே அவ்வளவு மரியாதை.
|
| |
நா ஒண்ணு நெனைச்சேன்
ஹாஸ்டலில் ஒரு நாள்...
மாயா! மாயா! இன்னும் ஒரு மாதத்தில் எக்ஸாம்ஸ் வர்றது, வா! இரண்டுபேருமே ப்ளான் பண்ணி படிக்கலாம். இப்ப கான்சன்ட்ரேட் பண்ணினா கூட போதும், நல்ல மார்க் வாங்கலாம். நான் சொல்றபடி தான் கேட்கணும், எக்ஸாம் முடியற வரை. ஓ.கே! என்றாள் மாயா.
|
| |
நாடி சொல்லும் கதைகள்
என்னிடம் இருக்கும் ஜீவநாடியிலிருந்துதான் "அகஸ்தியர்' அருள் புரிந்து வருகிறார் என்று இதுவரையில் நினைத்திருந்தேன். ஆனால் வேறு சில நாடிகள் மூலமும் அகஸ்தியர் அருள்புரிகிறார் என்பதை அகஸ்தியர் சொல்ல நான் கேட்டபொழுது அதிசயித்துப் போனேன்.
|
| |
நட்வர்சிங் நகர்ந்தார்
இராக்கிய எண்ணெய்க்கு உணவு'த் திட்ட ஊழல் புகாரில் சிக்கி இருக்கும் நட்வர் சிங்கிடம் இருந்து வெளியுறவுத் துறை பறிக்கப்பட்டு விட்டது. அவர் இலாகாப் பொறுப்பு இல்லாத அமைச்சராகத் தொடருகிறார்.
இந்த அதிரடி நடவடிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் எடுத்துள்ளார்.
|
| |
சிறுகதை: நாயகி
பையன் வைத்துவிட்டுப்போன பழரசத் தம்ளரின் உச்சியில் ஒரு எலுமிச்சந்துணுக்கு ஒட்டிக் கொண்டிருந்தது. அதைப் பிய்த்து ஓரமாய் எறிந்துவிட்டு ஒரு வாய் ஜஸப் பருகினாள் அவள். இனிப்பும், புளிப்பும், உப்புமாய் ஒரு சுவை நாவில் படர்ந்து உள்ளிறங்கையில் ஒரே நேரத்தில் உடம்பு தளர்வதுபோலவும், சுறுசுறுப்பாவது போலவும் மாயத் தோற்றங்களை உணரமுடிந்தது அவளால். மீதமிருந்ததை ஒரே மூச்சில் காலி செய்துவிட்டு ஒரு சிணுங்கலான தும்மலோடு எழுந்து
|
| |
இது ஒரு 86 வயது இளைஞரின் கதை
விதையாய் முளைத்து விருட்சமாய்த் தழைத்தவர் இவர்
சுற்றம் வாழ்ந்திடச் சுமை சுமந்தவர் இவர்.
மற்றவர் வாழத் தன் சுகம் துறந்தவர் இவர்.
|
|
>>More Headlines
|