|
| |
ராஜா வந்திருக்கிறார் * கு.அழகிரிசாமி
அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் "ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்திய தேச சரித்திர'ப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டான். செல்லையா அந்த வருஷம் இந்திய தேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டான். இருவரும் "படப்போட்டி'யை ஆரம்பித்து விட்டார்கள்.
|
| |
நவம்பர் மாத : "வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டி'யில் முத்திரைக் கதை
"வழக்கமாய், பத்துநாள் திருவிழாவிலே ஆறாம் நாளோ இல்லே ஏழாம்நாளோ உங்கப்பா சேஷநாராயணாவோட வீணைக்கச்சேரிதான் நடக்கும். நீங்களும் அவரோட வந்து, பல தடவைகள் அவரோட சேர்ந்து கச்சேரி பண்ணியிருக்கீங்க. இப்பதான் நீங்க தனியாய்க் கச்சேரி பண்ண ஆரம்பிச்சாச்சே!," என்றார் தாணுப்பிள்ளை.
|
| |
திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
சிபாரிசுகளை நாடாமல் முயற்சியால் முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். சிபாரிசுகளோடு வருபவர்களையும் மீறி முன்னேறும் அளவு தகுதியைக் கடின உழைப்பால் வளர்த்துக்கொள்ளவும் வேண்டும்.
|
| |
ஆங்கிலக் கல்வி மோகம் தலைவிரித்தாடுகிறதே...
1940-ம் வருடம் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த கையுடன் என் தந்தை என்னைப் பரமாச்சாரியாரிடம் கூட்டிச் சென்றார். மேற்படிப்புக்குத் திருச்சிக்கு என்னை அனுப்ப அவருக்கு எண்ணம். பரமாச்சாரியார் 'தமிழில் எல்லாமே இருக்கிறது. இருந்தும் தமிழ்ப்படிப்பு குறைந்து வருகிறது. பையனைத் தமிழில் சேர்த்துவிடு' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். அவர் சொன்ன பின் அப்பீல் ஏது? திருவையாறு கல்லூரியில் சேர்ந்தேன். பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி முதல் மாணவனாகவே இருந்தேன்.
|
| |
எது ஆபாசம்?
இது மிகவும் கவனமாக அணுகப்பட வேண்டிய ஒன்று. அவள் சமூகத்தில் இழிவுற்ற நிலையில் வாழ்பவள். அவளே ஆபாசமானவள் என்கிறது சமூகம். அவளோ மதிப்பு வாய்ந்த உன்னதக் கலைஞர்களின் படைப்புகளை ஆபாசமானதாகக் கருதுகிறாள். இதிலிருந்து ஆபாசம் என்பது என்ன என்கிற கேள்வி எழுகிறது.
|
| |
இலக்கிய உலகம்...
இம்மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த ஷிரின் இபாடி மற்றும் கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தாய் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இந்த மாநாட்டில் கவிஞர் வைகைச் செல்வி கலந்துகொண்டு ''ஆலையில் பணிபுரியும் பெண்களின் உடல்நலம்'' குறித்துக் கட்டுரை வாசிக்கிறார்.
|
| |
தொகுப்பு: பால பாரதி
"கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துவது இன்றைய தேதியில் முடியாத காரியம். ஐம்பது ரூபாய் கடன் வாங்கினால் அவன் பிச்சைக்காரன். ஐநூறு ரூபாய் கடன் வாங்கினால் அரசாங்க குமாஸ்தா. ஐந்து லட்சம் வாங்கினால் சிறு தொழிலதிபர். ஐம்பது லட்சம் வாங்கினால் பெரிய தொழிலதிபர். ஐநூறு கோடி வாங்கினால் அரசாங்கம்.
|
| |
விரைந்து தமிழ் இனிச் சாகும்?
"வாடா தவளை" என்றேன் நான். முகம் முழுவதும் பல்லாய் சிரித்தபடி நுழைந்தவனின் காதில், பெரிய அளவு தோடு போல ஒரு டிரான்ஸிஸ்டர். இளங்காலையில், மிக இனிமையான குரலோடும் தமிழோடும், யாரோ வழங்கும் சிந்தனைக்குரிய உரை ஒன்று அதில் ஒலித்துக் கொண்டிருப்பது கேட்டது.
|
| |
பாடிப் பறந்த குயில்கள்
சிவாஜி கணேசனின் முதல்படமான 'பராசக்தியில் அவர் பாடிய 'கா கா கா...' என்ற பாட்டுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர் சி.எஸ்.ஜெயராமன் என்று அழைக்கப்படும் சிதம்பரம் எஸ்.ஜெயராமன். 60-களில் வெளிவந்த 'தெய்வப்பிறவி' வரையிலும்கூட இவர் சிவாஜி கணேசனுக்காகப் பின்னணி பாடியுள்ளார்.
|
| |
கின்னஸ் சாதனையா வேதனையா
சாதனை என்பது ஓர் ஆக்கப்பூர்வமான செயலாகத்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை ஓரங்கட்ட வைத்துவிட்டது இன்றைய மனிதர்களின் புகழ் ஆசை. தான் மற்றவர்களைவிடவும் உயர்ந்தவன் என்பதை நிரூபணம் செய்ய விரும்புவது மனிதனின் இயற்கைக் குணம். மற்றவரின் சாதனையைத் தான் விஞ்ச வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்து அதைச் சாதனைப் பட்டியலில் சேர்த்துவிடத் துடிக்கின்றார்கள்.
|
|
>>More Headlines
|